தேணிலே ஊரிய செந்தமிளின் கவிதையில் வந்த
பிழைகணாத் திருத்தி எழுதுக.​

தேணிலே ஊரிய செந்தமிளின் கவிதையில் வந்த
பிழைகணாத் திருத்தி எழுதுக.​

About the author
Bella

1 thought on “தேணிலே ஊரிய செந்தமிளின் கவிதையில் வந்த<br />பிழைகணாத் திருத்தி எழுதுக.​”

  1. Answer:

    உள்ளத் துள்ளது கவிதை – இன்பம்

    உருவெ டுப்பது கவிதை;

    தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

    தெரிந்து ரைப்பது கவிதை.

    இலக்கிய பஞ்சகம்

    114 வள்ளுவர் தந்த திருமைறையைத் – தமிழ்

    மாதின் இனிய உயிர் நிலையை

    உள்ளம் தெளிவுறப் போற்றுவமே – என்றும்

    உத்தம ராகி ஒழுகுவமே.

    பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து – கம்பன்

    பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை

    நாவின் இனிக்கப் பருகுவமே – நூலின்

    நன்னயம் முற்றுந் தெளிகுவமே,

    116 தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை

    தேரும் சிலப்பதி காரமதை

    ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்

    ஓதி யுணர்ந்தின் புறுவோமே.

    கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் – இன்பக்

    கற்பனை சேருங் களஞ்சியத்தை

    முற்ற அளந்து தெரிவோமே – காதல்

    மூழ்கும் துறைகண்டு வாழ்வோமே.

    பண்டை இயற்கை வளங்களெல்லாம் – பத்துப்

    பாட்டின் வளத்தினிற் கண்டறிந்து,

    மண்டல மெங்கும் கமழும் அருந்தமிழ்

    வாசம் நுகர்ந்து மகிழ்வோமே.

    Reply

Leave a Comment